கோவை எட்டிமடை அருகே கோர விபத்து!! காவல்துறையினர் விசாரணை!!!

கோவை மாவட்டம் திருமலையம் பாளையம் அருகே ஆர்.டி.ஓ சோதனை சாவடி உள்ளது. இங்கு ஆர்.டி.ஓ சோதனைக்காக லாரிகள் நின்று செல்வது வழக்கம்.

இந்த சூழ்நிலையில் எட்டி மடையில் இருந்து கோவையை நோக்கி வந்த கார் இன்று திருமலை பாளையம் அருகே ஆர். டி. ஓ. சோதனைச் சாவடி முன் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கண்டைனர் லாரி மீது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி லாரியின் முன் இடித்து கோர விபத்து ஏற்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் பயணித்த சிறுவன் உட்பட 4 நபர்கள் படுகாயம் அடைந்தனர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அப்பகுதிக்கு காவல்துறை சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments