மக்களை ஏமாற்றிய அரசின் ஓணம் சிறப்பு திட்டம்??

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் கேரளாவில் தற்பொழுது ஓணம் விழா காலம் துவங்கப்பட இருப்பதால் வருட வருடமாக அனைத்து ரேஷன் கார்டு உறுப்பினர்களுக்கும் ஓணம் சிறப்பு பரிசு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த வருடம் ஓட்டு போட்ட அனைத்து  மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளன. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த வருடம் மஞ்சள் நிற ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே ஓனம் கிட்டு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது அனைத்து தரப்பின மக்களிடையே ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே இடுக்கி போன்ற மாவட்டங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மேல் உள்ளவர்கள் என்ற வித்தியாசம் பார்க்காமல் தான் அனைத்து சிறப்பு திட்டங்களும் நல உதவிகளும் வழங்கப்பட்டு வந்தன.

காரணம் அங்கு வசிப்பவர்களில் அதிகப்படியான நபர்கள் ஒரே பொருளாதார நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டது ஆனால் இந்த வருடம் அரசு அறிவித்த இந்த செய்தியானது தேயிலை தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பாதிப்பை அளித்துள்ளதாக மக்கள் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments