மைசூரில் நடைபெற்ற யுவா காபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு வரவேற்பு!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் குறுக்குச்சாலை அருகே கே வேலாயுதபுரம் கிராமத்தைச் சார்ந்த நேசமணி விஜயலட்சுமி அவர்களின் மகன் கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த காபடி  விளையாட்டு போட்டியானது கர்நாடக மாநிலம் மைசூர் அருகே இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 9 அணிகள் கலந்து கொண்டன. மைசூரில் நடைபெற்ற யுவா காபடி  போட்டியில் மூன்றாவது அணியாக நீலகிரி கனெக்ட்ஸ் அணி வெற்றி பெற்றது .

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

Watch video here..

இந்த செய்தியை அறிந்த ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஓட்டப்பிடாரம் துணைப் பெருந்தலைவர் காசி விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று மாலை குறுக்கு சாலையில் மணிகண்டனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த  விழாவில் ஓட்டப்பிடாரம் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ் அவர்கள் மற்றும் வேலாயுதபுரத்தைச் சார்ந்த கிராம மக்கள்  அவரது உறவினர்கள் பொதுமக்கள் என பலர்  சால்வை அணிவித்து வரவேற்பு  செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments