பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றும் திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

 

-MMH

பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக கீழ வல்லநாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெய்வச்செயல் புரம் பஸ் ஸ்டாப் அருகில் திமுக தேர்தல் அறிவித்து தேர்தல் வாக்குப்பதிவை செயல்படுத்த வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் நலனுக்கு எதிராகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் சிறப்பாக வரும் திமுக அரசைக் கண்டித்து 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறிய திமுக அரசைக் கண்டிக்கிறோம் , தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் ரூபாய் 1000 வழங்குவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு தற்போது பெரும்பான்மையான பெண்களுக்கு உரிமை வழங்க மறுக்கிறது. ஆறுகள் தோறும் தடுப்பணைகள் கட்டுவோம் என்று தேர்தல் அறிவித்து திமுக அரசு அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இருக்கிறது, மணல் கல்குவாரிகள் செயல்பாட்டில் ஊழல் மலிந்து கனிமவளக் கொள்ளை நடந்து வருகிறது, தமிழகத்தின் இயற்கை வளம் வெளி மாநிலத்திற்கு நடத்தப்படுகிறது. 

அங்கன்வாடி மையங்கள் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் வருவதை வேடிக்கை பார்க்கிறது திமுக அரசு. ஊரெங்கும் கள்ளச்சாராயம், தெருவெல்லாம் கஞ்சா விற்பனைக்கு, அப்பாவி மக்களை அடிமையாக்கும் ஒரு நம்பர் லாட்டரி போன்ற சட்ட விரோத சம்பவங்களைத் தடுக்க முடியாமல் திமுக அரசு திணறுகிறது. கல் விற்பனையை தடுக்கும் திமுக அரசு சாராய டாஸ்மாக் கடைகளை தானே நடத்தி மக்களை வஞ்சிக்கிறது.தினந்தோறும் கொலைச் சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை தடுக்க திமுக அரசால் முடியவில்லை, 

டாஸ்மாக் கடையை மூட வேண்டும், கண்ணீரில் வாழும் ஏழை குடும்பங்களை காக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை திமுக அரசு காற்றில் பறக்க விட்டது, அனைத்து உணவுப் பொருட்களின் தக்காளி முதல் வெங்காயம் வரை, பருப்பு முதல் அரசி வரை விலைவாசி உயர்வு இறக்கை கட்டிப் பறக்கிறது கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது திமுக அரசு. அனைவருக்கும் வீடு , வீடு தோறும் குடிநீர் கிராமந்தோறும் சாலைகள் என மத்திய அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கியது அதில் திமுக அரசு ஊழல் செய்கிறது.

மூன்று முறை மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, வாகன பதிவு கட்டணங்கள், பத்திர பதிவு கட்டண உயர்வு என மக்கள் மீது அனைத்து விதமான வரி உயர்வு விதித்து தமிழக மக்களை வஞ்சிக்கிறது.

இந்து கோயில்களை இடித்து தள்ளும் திமுக அரசு தமிழகத்தில் பக்தர்களின் மனம் வேதனையுடன் திமுக மத விரோத போக்கை கடைபிடிக்கிறது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் கல்வி வளர்ச்சி தடைபடுகிறது. ஆரம்ப சுகாதார மையங்களில் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் பணியாளர்கள் மருந்து பொருட்கள் இன்றி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் .

இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் வக்கீல் செந்தில்குமார் என்ற பிரபு தலைமையிலும் கிளைத் தலைவர்கள் பரமசிவன் தங்கராஜ் முன்னிலையிலும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒன்றிய நிர்வாகிகள் பாலமுருகன், ரமேஷ் பூபதி , வாழவந்தான், பிரவின், சுனில், முத்துராம், மகளிர்ராபின், மூர்த்தி, செந்தூர்பாண்டியன், மணிமுத்து, கணேசன் ஒன்றிய செயலாளர் செல்வி , மகளிர் அணி ஒன்றிய செயலாளர்கள் அம்பிகா , வசந்தி, கல்பனா என பலர் கலந்து கொண்டனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர், 

-முனியசாமி.

Comments