பேரிலோவன்பட்டியில் விளாத்திகுளம் வட்டார சுகாதாரத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கம் !!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார சுகாதாரத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கம்  பேரிலோவன்பட்டி நல்லழகு நாடார் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பள்ளியின் துணை தலைமை ஆசிரியை அற்புதமேரி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் வட்டார சுகாதார புள்ளியிலாளர் தீபக்ராம், ICTC ஆலோசகர் காளிராஜன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் கணேசமூர்த்தி, ஆய்வக நுட்புநர்கள் இளையராஜா, விக்ராந்த், ஆகியோர் கலந்து கொண்டனர். 

மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்துப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. உலக மக்கள் தொகை தின உறுதிமொழி எடுக்கப்பட்டு மரம் நடப்பட்டது. இந்த கருத்தரங்கத்தில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments