மின்சார டிரான்ஸ்பார்மர் பாகங்களை திருடும் மர்ம கும்பல்!!

கோவை மாவட்டம் துடியலூர் அருகே சின்னத்தடாகம் பகுதியில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள மின்வாரியத்திற்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர்களின் பாகங்களை சமூக விரோதிகள் திருடிச் சென்றுவிடுகின்றனர்.

சின்னத்தடாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இவை இயங்கக்கூடாது என அரசு தடைவிதித்தது. இதன் காரணமாக செங்கல் சூளைகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளையும் மின்வாரியம் துண்டித்து விட்டன. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் காட்டுப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பல டிரான்ஸ்பார்மர்களுக்கு மின்விநியோகம் இல்லை. இதனைப் பயன்படுத்தி சமூக விரோதிகளில் இரவு நேரங்களில் சூளைகளுக்குள் புகுந்து செங்கல் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திர பாகங்கள் மற்றும் மின்சார வயர்களை திருடிச் சென்று விடுகின்றனர்.

கோவை ஆனைகட்டி சாலையில் தண்ணீர் பந்தல், அநுவாவி சுப்பிரமணியர் கோவில் பிரிவில் காட்டுப்பகுதியில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர்களின் பாகங்களை மர்மநபர் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து நேற்று வழக்கு பதிவு செய்து தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments