தமிழ்நாட்டில் மத்திய அரசு திட்டங்களில் மோடியின் புகைப்படம் இல்லை என குற்றச்சாட்டு!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் இன்று ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன் அவர்களிடம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் மத்திய அரசின் திட்டங்களில் பிரதமரின் புகைப்படம் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வருவதில்லை என குற்றச்சாட்டு இருக்கிறது. 

சமீப காலமாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் கிராமப்புற வளர்ச்சி திட்டம் பிரதம மந்திரியின் திட்டங்கள் ஆகியவற்றில் மத்திய அரசின் நிதி பங்களிப்பு மத்திய அரசின் திட்டங்களை பற்றி விளம்பரங்கள் எதுவும் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படுவதில்லை,  குறிப்பாக ஜல்ஜீவன் திட்டம் மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமாகும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை கண்டித்து வருகிற சனிக்கிழமை ஓட்டப்பிடாரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த  நிகழ்வின் போது ஒன்றிய தலைவர் M.சரவணன் ஒன்றிய பொதுச் செயலாளர் E.முத்தமிழ்செல்வன் தொழில்துறை பிரிவு ஒன்றிய தலைவர் S.வேல்ராஜ் விளையாட்டு துறை பிரிவு துணைத் தலைவர் சுரேஷ் கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் கோயில் பிள்ளை மற்றும் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments