பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான விழிப்புணர்வு!!
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் பள்ளிக்கூடம் 2. O என்ற மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் மாவட்ட காவல் துறையினர் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைத்து பள்ளி குழந்தைகளையும் விழிப்புணர்வின் மூலம் வலுவூட்டப்பட்டு அவர்களை விழித்திடும் குழந்தைகளாக வடிவமைத்து வருகின்றனர்.
மேலும் பள்ளிக்கூடம் 2. 0, திட்டத்தின் கீழ், பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தங்களை தாங்களே சில பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள தற்காப்புக் கலை பயிற்சியும் கற்றுக் கொடுக்கப்படுகின்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன் தொடக்கமாக தடாகம் காவல் நிலையத்தை சேர்ந்த ஆனைகட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பயிலும் 16 மாணவிகளுக்கு திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாட்கள் தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கப்பட்டது, அம்மாணவிகளுக்கு நேற்று கோபாலபுரத்தில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் காவல் அலுவலகத்தில் காவல்துறையினருடன் ஒரு நாள், என்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மாணவர்களுடன் கலந்துரையாடினார் மேலும் மாணவர்களை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள, ஆயுதபடை வளாகத்திற்கு அழைத்து சென்று, பல்வேறு நிகழ்வுகளில் இறந்த காவலர்களுக்கான நினைவு தூண்களை காட்டினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.
Comments