சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை சிங்கோனா எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் உலா!! பொதுமக்கள் பீதி!!!

கோவை மாவட்டம் ஆனமலை புலிகள் காப்பகம் பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை பொள்ளாச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலையடிவார பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் புகுந்து விவசாயிகளின் பயிர்களை நாசம் செய்து வந்தது. மேலும் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்தது.

இதனால் இரண்டாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்க பட்ட மக்னா யானை ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியில் விடப்பட்டது. ஆனால் அந்த யானை மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறியது. யானையை கண்காணித்து வந்த வனத்துறையினர் பொள்ளாச்சி சேத்துமடை பகுதியில் இருப்பதை அறிந்து மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர். அதை சின்ன கல்லாறு வனப்பகுதியில் விட்ட வனத்துறையினர் யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தி தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த சூழ்நிலையில் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா காட்டு யானை இரவு நேரங்களில் சிங்கோனா குடியிருப்பு பகுதியில் உலா வருவதை பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளார்கள். வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு மீண்டும் மக்னா காட்டு யானையை பிடித்து சின்ன கல்லார் பகுதியில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments