வால்பாறை அரசு பேருந்தில் அமர இடம் இருக்கு!! ஆனா இல்ல!! பஸ் பயணிகள் வேதனை!!

கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகள் உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள்  வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் எஸ்டேட் பகுதிகளில் இருந்து வால்பாறை வந்து வால்பாறையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்  இதனால் அரசு பேருந்துகளில் கூட்டம் நிரம்பி காணப்படும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது போன்று உள்ள சூழ்நிலையில் வால்பாறையில் இருந்து கருமலை வழியாக சுற்றி  பொள்ளாச்சி செல்லும் பேருந்துகளில் ஏறும் பயணிகள் அமர இருக்கைகள் தேடும் பொழுது சில இருக்கைகளை பிடித்து வைத்துக் கொண்டு இந்த இருக்கைக்கு ஆட்கள் வருவார்கள் என்று கூறுவதாக புகார் எழுதுவது அந்த பேருந்து வால்பாறையில் இருந்து கிளம்பி பச்சமலை வரும் வரை இருக்கைகள் பிடிக்கப்பட்டு காலியாக தான் வருகிறது.

இதை பார்க்கும் பயணிகள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் இது பற்றி கேட்டால் அவர்கள் முறையாக பதில் சொல்லாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது இதை பார்க்கும் பயணிகள் பேருந்துகளில் அமர சீட்டு இருக்கு ஆனா இல்ல  எனும் தோணியில் பேசி வருகின்றனர். 

அதாவது வால்பாறையில் இருந்து ஏறுபவர்களுக்கு அமர இடம் இல்லை ஆனால் இடையில் ஏறுபவர்களுக்கு வால்பாறையில் இருந்து சீட் பிடித்துக் கொண்டு வந்து அமர இடம் கொடுக்கின்றனர் இது என்ன நியாயம் என்று பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-நிருபர்கள் குழு.

Comments