ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள ஆர்ப்பாட்டம்!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் நேற்று மாலை சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்  ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து வட்டத் தலைவர் தோழர் ஞானமணி தலைமையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

WATCH VIDEO HERE..

இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய கோரிக்கைகள்:

தேர்தல் கால வாக்குறுதியான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் ஓய்வூதியம் வழங்கிடவும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம்நடைமுறைப்படுத்திட வலியுறுத்தியும் காலி பணியிடத்தை விரைந்து நிரப்பிட வலியுறுத்தியும்பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  வட்டத் துணைத் தலைவர் எ மரிய செல்வம் ஆண்டாள்  உமா சுமதி வெள்ளையம்மாள் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலாளர் பி அகிலா மற்றும் வட்டார பொருளாளர் எஸ் வள்ளியம்மாள் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கஉரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் தோழர்ஜி திருமாலை அவர்கள் சிறப்புரையாற்றினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி நன்றி கூறினார். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments