விளாத்திகுளத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் கடத்தி வந்த வாகனம் பறிமுதல்!!!

விளாத்திகுளம் போலீசார் நேற்று  விளாத்திகுளம்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள கரிசல்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகிக்கும்படி நின்று கொண்டிருந்த வாகனத்தை பரிசோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை 5 மூடை இருப்பது தெரிய வந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் வாகனத்தின் உரிமையாளர் விளாத்திகுளம் பகுதியில் கடை நடத்தி வரும் ஜெயராஜ் (48)என்பதும் புகையிலை பொருட்களை கடையில் வைத்து விற்பதற்காக கொண்டு வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. 

இதனை அடுத்து விளாத்திகுளம் போலீசார் வாகனத்தையும் சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து ஜெயராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments