தமிழ்நாடு விவசாயிகள் மாநாடு விளாத்திகுளத்தில் நடைபெற்றது!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் 9வது மாநில மாநாடு தூத்துக்குடி விவசாய சங்கம் சார்பில் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை மாநாடு நடைபெற்றது. 

இந்த மாநாட்டில் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டது குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் வடக்கு பகுதி வனம் பார்த்த பூமியான ஓட்டப்பிடாரம் விளாத்திகுளம் கோவில்பட்டி தொகுதியில் விவசாயம் அழிந்து வருகிறது.  ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் கிழக்கு பகுதி முழவதும் காற்றாலை நிறுவனம் சோலார் மூலம் விவசாயிகள் நிலம் அழிக்கப்பட்டது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

WATCH VIDEO HERE...

தனியார் நிறுவனம் முலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் காப்பீடு தொகை வேளாண்மை பொருட்கள் கூட வாங்க முடியாது. எனவே அரசு காப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை வைத்தனர். ஒருபுறம் மக்கள் தொகை பெருக்கம் இன்னொரு பக்கம் விவசாயிகள் தற்கொலைகள் இதனைத் தவிர்க்க அரசு குறைந்த பட்ச ஆதார விலையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசப்பட்டது. 

இந்த மாநாட்டில் மாசிலாமணி  மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு விவசாய சங்கம், நல்லையா மாநில இணைச் செயலாளர் செயலாளர், கரும்பன் மாவட்டச் செயலாளர், லெனின் குழாய் மாநில குழு உறுப்பினர்,  தனலட்சுமி மாவட்ட செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments