கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறிச்சி பகுதி கழகம் மற்றும் ஸ்ரீ சுரபி இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டிசைனிங் இணைந்து குறிச்சி பகுதியில் இலவச தையல் பயிற்சி மையம்!!

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க.வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆக்கபூர்வ செயல்திட்டங்களை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை  தெற்கு மாவட்ட தி.மு.க.குறிச்சி பகுதி கழகம் சார்பாக குறிச்சி,வசந்தம் நகர் பகுதியி் பெண்களுக்கான இலவச தையல் மற்றும் ஆரி ஒர்க் எம்ப்ராய்டரி  பயிற்சி மையம் துவங்கப்பட்டது.

ஸ்ரீ சுரபி இன்ஸ்ட்டியூட் ஆப் பேஷன் டிசைனிங் இணைந்து துவங்க உள்ள இதற்கான துவக்க விழா குறிச்சி பகுதி கழக செயலாளர் காதர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஸ்ரீசுரபி இன்ஸ்ட்டியூட் நிர்வாக இயக்குனர் சுலோச்சனா அனைவரையும் வரவேற்று பேசினார்.சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கலந்து கொண்டு புதிய மையத்தை திறந்து வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பெண்களுக்கு சுய தொழில் துவங்கவும், பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு இது போன்ற இலவச பயிற்சி மையங்களை துவக்கி உள்ளதாகவும், இதில் ஒவ்வொரு குழுக்களாக பயிற்சிகள் வழங்கப்படும் என விழா ஏற்ப்பாட்டளர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் தி.மு.க.மாநில பொது குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன், மனிதநேய பவுண்டேஷன் டிரஸ்ட் தலைவர் கோவை சுலைமான் மற்றும்  மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் உதயகுமார் குணசேகரன் அஸ்லாம் பாஷா சரளா வசந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments