கோவை ஆத்துப்பாலம் பகுதியில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அவர்கள் நேரில் ஆய்வு!!

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பால பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அவர்கள்  நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் பொள்ளாச்சி மற்றம் பாலக்காடு செல்லும் சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

இதனால் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆத்துப்பாலம் பகுதியில் திடிரென ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது போக்குவரத்து நெரிசல் குறைப்பது குறித்து அங்கிருந்த போக்குவரத்து காவலர்களிடம் ஆலோசனைகளை வழங்கினார்.  போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர், 

-சி.ராஜேந்திரன்.

Comments