கீழஈரால் கிராமத்தில் ரூ.56.40-லட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார மைய கட்டிடம் அடிக்கல் விழா!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்,கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.56.40-லட்சம் மதிப்பீட்டில் புதியதாக  வட்டார பொது சுகாதார மைய கட்டிடம்  பணிகளை இன்று  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சுகாதார துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது  மக்கள் தொகையை கருத்தில் கொண்டு கீழஈரால் நான்கு வழிச்சாலை அருகே  அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்    புதியதாக சுகாதார மையம் கட்ட முடிவு செய்யப்பட்டு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

WATCH VIDEO HERE....

பின்னர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்று வரும் பணிகளில் பற்றி கேட்டறிந்தார் அதன் அருகில்  கழிவு நீர் ஓடையில்   தடுப்பு சுவர்  அமைக்க  ஆலோசனைகள் வழங்கினார். 

இந்த விழாவில்  வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் கீழஈரால் ஊராட்சி மன்ற தலைவர் பச்சைப்பாண்டி ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல்  எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயமுத்து கிளைச் செயலாளர் சண்முகவேல் இளைஞர் அணி மகேந்திரன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments