மணியாச்சி அருகே சுந்தரராஜபுரம் கிராம பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய யூனியன் சேர்மன்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணியாச்சி ஊராட்சி சுந்தரராஜபுரம் கிராம பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான ஊருக்கு மேற்கு பகுதியில் மழைக்காலங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஓடையின் நடுவே உயர்மட்ட பாலம் அமைக்கவும், 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் மாணவ மாணவிகள் மழைக்காலங்களில் சிரமம் இன்றி சென்றுவர ஓடையின் நடுவே உயர்மட்ட பாலம் அமைத்துதர வேண்டும் என்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு எம் சி.சண்முகையா அவர்களிடமும் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் திரு எல்.ரமேஷ் அவர்களிடமும் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

Watch video here...

இதனையடுத்து ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் மூலம் ஊருக்கு மேற்கு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ரூபாய் 42.50 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் தொடக்கப்பள்ளி அருகில் 15வது நிதி குழு திட்டத்திலிருந்து 9.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் திரு எல்.ரமேஷ் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாச்சியர் சுரேஷ் அவர்கள் யூனியன் ஆணையாளர் சிவபாலன் அவர்கள் வருவாய் ஆய்வாளர் செல்வரேகா கிராம நிர்வாக அலுவலர் ராஜன் மணியாச்சி ஊராட்சி மன்ற தலைவி பிரேமா கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் சுந்தரராஜபுரம் கிளை செயலாளர் ஆறுமுகராஜா வடமலாபுரம் கிளை செயலாளர் முருகன் சுந்தரராஜபுரம் சொர்ணவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments