ஊத்துப்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் முறைகேடுகள் சீர்கேடுகளை கண்டித்து பாய் விரித்து உறங்கும் போராட்டம்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி ஊராட்சி மன்றத்தின் சீர்கேடுகளை கண்டித்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாய் விரித்து உறங்கும் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்:

ஊத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், கிராம சபை தீர்மானத்தை மீறி செயல்படுவதை கண்டித்தும், ஊராட்சியில் சிறப்பு தணிக்கை செய்ய வேண்டும், பல வருடங்களாக அடிப்படை வசதிகளை செய்து தர மறுப்பதை கண்டித்து, கிராம சபை கூட்டத்தில் கோரிக்கைகளை பதிவு செய்ய மறுக்கும் தலைவர் மற்றும் அதற்கு துணை போகும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் யூனியன் ஆணையாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த புகார் குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குமராபுரம் கிளை செயலாளர் ரங்கநாதன் மற்றும் கிளைச் செயலாளர் பொய்யா முத்து கருத்தப்பாண்டி லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments