புதியம்புத்தூரில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை எம்எல்ஏ சண்முகையா தொடங்கி வைத்தார்!!

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில்,  கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை  தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் ஜான் தி  பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில்  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். 

இம்முகாமில் இதயம் காது மூக்கு தொண்டை பல் கண் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு சர்க்கரை நோய், பிரஷர், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டு, மருந்துகளும் வழங்கப்பட்டது. மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் எம்எல்ஏ சண்முகையா வழங்கினார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

WATCH VIDEO HERE..

இந்த சிறப்பு முகாமில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி, மருத்துவ அலுவலர்கள் அன்பு மாலதி, ஜீவராஜ் பாண்டியன், சித்த மருத்துவ அலுவலர் மல்லிகா, பள்ளி தாளாளர் செந்தூர் மணி, ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன்,  துணை வட்டாட்சியர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments