புதியம்புத்தூரில் கூலி தொழிலாளி தாக்கியதில் ரெடிமேட் வியாபாரி உயிரிழப்பு போலீஸ் வழக்கு பதிவு!!

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பஜாரில் கூலி தொழிலாளி தாக்கியதில் பலத்த காயமடைந்த ரெடிமேட் வியாபாரி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு புதியம்புத்தூர் போலீசார் விசாரணை. தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் காமராஜ் நகரை சேர்ந்த லட்சுமணன் மகன் அழகர் (38) என்பவர் ரெடிமேட் தொழில் செய்து வருகிறார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயம் மகன் முருகேசன் (43) என்பவர் கோயம்புத்தூரில் காய்கறி நடத்தி வந்துள்ளார்.

மேலும் அவருக்கு அழகர் காய்கறியை இங்கிருந்து அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில் அழகர் முருகேசனின் உறவினர் ஜேம்ஸ் என்பவருக்கு காய்கறி அனுப்பி வந்ததால், முருகேசனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு காய்கறி கடையை காலி செய்து விட்டு புதியம்புத்தூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 17 அன்று புதியம்புத்தூர் இந்து நாடார் திருமண மண்டபத்தில் வைத்து முருகேசன் அழகரிடம் ஜேம்ஸ் க்கு எதற்காக காய்கறி அனுப்புகிறாய் என்று தகராறு செய்துள்ளார். மேலும் அவ்வப்போது அவர்களுக்கிடையே பிரச்சினையும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில்  செப்டம்பர் 24 அன்று இரவு 11:30 மணியளவில் அழகர் தனது நண்பர்களுடன் புதியம்புத்தூர் பஜார் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு கையில் விறகு கட்டையுடன் வந்த முருகேசன் அழகரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் அழகர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதைஅடுத்து அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவும் அங்கிருந்து முருகேசன் ஓடி விட்டார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அழகரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அழகர்  இன்று அதிகாலை இரண்டு மணி அளவில் பரிதாபமாக  உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீசார் கொலை வழக்காக  வழக்கு பதிவு செய்து  முருகேசனை கைது செய்து பேரூரணி சிறையில் அடைத்தனர் .

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments