"1000" கிலோ கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது!!

 


கோவை: கிறிஸ்துமஸிற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில் பிளம் கேக் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா காலனி ஹாஸ் 6  ஹோட்டலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக "1000" கிலோ கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது. 

இதில் கேக் தயாரிக்க  தேவையான  முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம், வால்நட் உள்ளிட்ட 20 வகையான உலர் பழங்கள் மற்றும் ஒயின் உள்ளிட்ட பழ ரசங்களை ஊற்றி கலந்து 1000"கிலோ தயாரிக்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் சமூக ஆர்வலர் லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் பெண்கள்,  ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊழியர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

பின்னர் இது குறித்து பேசிய லீமா மார்டின்  ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை குடும்ப விழாவாக கொண்டாடுவதாகவும் இந்த ஆண்டு  1000"கிலோ கேக் தயாரிப்பதற்கான உலர் பழங்கள் கலவை பணிகளை அனைவரும் இணைந்து செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக தெரிவித்தனர்.

மேலும் கோவை நகரப் பகுதிகளில் கேமரா பொருத்துவதற்காக 7 கோடியே 7 லட்சத்தி 82 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நகரத்தைச் சுற்றி 240 கிலோ மீட்டர் சுற்றளவில் கேமராக்கள் பொறிப்பதற்கு கோவை மாநகராட்சிக்கு ரோட்டரி கிளப் சார்பாக நிதி வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments