பண்டிகை காலங்களில் இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனை யாளர்களுக்கு உணவு பாதுகாப்பு விதிமுறைகள் அறிவிப்புகள்!!

பண்டிகை காலங்களில் இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனை யாளர்களுக்கு உணவு பாதுகாப்பு விதிமுறைகள் அறிவிப்புகள்!!

விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!!

தமிழகத்தில் ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு பேக்கரி மற்றும் ஹோட்டல்களில் இனிப்பு கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் தயாரிப்பாளர்கள் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பண்டிகை காலங்களில் மட்டும் இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பவர்கள் மற்றும் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை யாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இனிப்பு கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் உணவு பொருட்களை தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும், கலப்படமான பொருள்களையோ அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக இனிப்பு கார வகைகளில் நிறமிகளையோ யாரும் உபயோகிக்க கூடாது. தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கொண்டு பொட்டலமிடுவது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி அவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அச்சிடப்பட்ட செய்தித்தாள்களை தரையில் விரித்து எண்ணெண்யை உறிஞ்சும் வகையில் வைத்திருக்கும் நடைமுறையை யாரும் பின்பற்றக் கூடாது, இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட கலர் நிறமிகள் அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே கடை உரிமையாளர்கள் பயன்படுத்த வேண்டும் அளவிற்கு அதிகமாக நிறமிகளை சேர்த்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய் நெய் மற்றும் மூலப் பொருள்களின் விவரங்களை முழுமையாக அதன் கொள்ளளவு கேன்களில் லேபிளில் நிச்சயம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

உற்பத்தியாளர்கள் பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை தனியாக இருப்பு வைக்க வேண்டும் மற்றும் அதனை உபயோகிக்கும் கால அளவை முழுமையாக அச்சிட்டிருக்க வேண்டும். மேலும் உற்பத்தியாளர்கள் பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகளை மற்ற இனிப்பு வகைகளோடு சேர்க்காமல் தனியாக பேக் செய்து வழங்க வேண்டும்.

இனிப்பு மற்றும் கார வகைகள் தூய்மையான குடிநீரைக் கொண்டே அனைத்தும் தயாரிக்கப்பட வேண்டும். தயாரித்த பிறகு அதற்கு உபயோகப் படுத்தப்பட்ட பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை சுத்தமாக கழுவி பூஞ்சை தொற்று வராத வகையில் கடை உரிமையாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பண்டிகை காலத்தில் மட்டும் சமுதாய நல கூடங்கள், இதர இடங்கள் மற்றும் கல்யாண மண்டபங்களில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக http://foscos.fssai.govt.in என்ற இணையதளத்தில் தங்களது வணிகத்திற்கான உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று உரிய முறையில் பொது மக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே உரிமம் பெற்று காலக்கெடு முடிந்து இருந்தால் அதனை உடனடியாக அவர்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதுகாப்பு கவசங்கள்:

பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களுக்கு விபர சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, சைவ மற்றும் அசைவ உணவு குறியீடு ஆகியவற்றை அவசியமாக குறிப்பிட வேண்டும். பணியாளர்கள் கையுறை முடிக்கவசம் போன்ற உரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து பணியாற்ற வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மறுபடியும் சூடுப்படுத்தி பயன்படுத்தக் கூடாது. பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விவர சீட்டு இருந்தால் மட்டுமே அதனை வாங்கி உபயோகிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வேலை குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments