ஸ்கேட்டிங் விளையாடும் சிறுவர்,சிறுமிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது!!

  கோவை: முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை கலாம் அறக்கட்டளை,நேரு நகர் அரிமா சங்கம் மற்றும் ஃபேரா அமைப்பு ஆகியோர் இணைந்து ஸ்கேட்டிங் விளையாடும்  சிறுவர், சிறுமிகளுக்கு  பாராட்டு விழா நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாமின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கலாம் மக்கள் அறக்கட்டளையினர் இளம் தலைமுறையனரை ஊக்குவிக்கும் விதமாக கொண்டாடி வருகின்றனர். அதன் படி அவரது 92 வது பிறந்த நாள் விழா கலாம் மக்கள் அறக்கட்டளை,நேரு நகர் அரிமா சங்கம் மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர் சார்பாக கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சக்சஸ் அபினயா ஸ்கேட்டிங் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் இளம் ஸ்கேட்டிங் சாதனையாளர்களை  பாராட்டும் விதமாக நடைபெற்ற இதில், ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டு வரும் சிறுவர்,சிறுமிகளுக்கு கலாம் நினைவு பரிசு மற்றும் அவரது உருவ படம் வழங்கப்பட்டது. கலாம் மக்கள் அறக்கட்டளையின் நிறுவனர் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய துணை தலைவர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அபினயா ஸ்கேட்டிங் அகாடமியன் செயலாளர் ரகுபதி,நேரு நகர் அரிமா சங்கத்தின் தலைவர் மோகன்ராஜ்,செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கலாம் மக்கள் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் கார்த்திக் பாலசுப்பிரமணி பால்ராஜ் எழுத்தாளர் கனலி என்கிற சுப்பு

இன்ஜினியர் தேஜஸ்வினி மீனாகுமாரி கிரீஸ் மற்றும் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

...

Comments