பொள்ளாச்சி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ஆறுமுகம் வீதி பொதுமக்களின் கோரிக்கைக்கு தீர்வு..!!

 


பொள்ளாச்சி ஆறுமுகம் வீதியில் பல ஆண்டுகளாக  பாதையின் நடுவே பயனற்ற கழிப்பறை  பயன்படுத்தப்படாமல் சமூக விரோத செயல்கள் அரங்கேறும் கூடாரமாக இருந்தது பொதுமக்கள் பல ஆண்டு காலமாக கோரிக்கை வைத்தும் அதற்கான தீர்வு எதுவும் கிடைக்கப்பெறவில்லை.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நகர மன்ற உறுப்பினர் எம்.கே.சாந்தலிங்கம் வெற்றி பெற்ற பின் முதல் கட்டமாக பொதுமக்களுக்கு இடையூறாக சமூக விரோத செயல்கள் அரங்கேறும் கூடாரமாக பயன்படுத்தப்படாமல் இருந்த பழுதடைந்த கழிப்பறை கட்டிடம் அகற்றப்பட்டது அதை தொடர்ந்து தொடர் முயற்சியால் இப்பொழுது அப்பாதையில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது 

இப்பாதை அமைக்க நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் அவர்கள் வழி வகை செய்தார்.


பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால்  அப்பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு உள்ளனர் அதோட அன்றி கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு வருகின்றார்கள்.


நிகழ்வில் மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் சீனிவாச சம்பத்,ஜெயச்சந்திரன்,ரவிராம்,மோகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன்.

பொள்ளாச்சி.

Comments