ஒட்டப்பிடாரத்தில் ஆதனூர் சம்பவத்தைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் பணி பாதுகாப்பு சட்டம் கோரிக்கை!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஆதனூர் கிராமத்தில் நேற்று முன்தினம் போதை கும்பலால் கிராம நிர்வாக  உதவியாளர் துரைராஜ்  தாக்கப்பட்டார் இதை கண்டித்து ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் நூற்றுக்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் பேசியது:  இந்த ஆதனூர் சம்பவம் எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும் வேதனையும் தருகிறது. அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லாமல் இருக்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

watch video here...

அதிலும் குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் நிலைமை மோசம் எங்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். போலிஸ் பாதுகாப்பு வேனும் அல்லது கை துப்பாக்கி எங்களுக்கு அனுமதி தர வேண்டும். மேலும் இந்த போதை கும்பலுக்கு தண்டனைகள் என்பது அரசு சொத்துக்களை சேதப்படுத்தியது பொதுமக்களை அச்சுறுத்தல் என பல்வேறு பிரிவுகளில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் . பணியின் போது தாக்கப்பட்டால் நிதி உதவி வழங்க வேண்டும் என பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் பொருளாளர் குமாரலிங்கம் செயலாளர் கணேஷ மூர்த்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் ரமேஷ் தமிழ்நாடு கிராம நிர்வாக முன்னேற்ற சங்கம் சந்திரசேகர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பெருமாள் தமிழரசன் வட்ட தலைவர் திருமலை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சுடலைமணி செல்வகுமார் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கல்வி மாவட்ட தலைவர் குணசேகரன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கல்வி வட்டார தலைவர் முத்துவேல் சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்கு,

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,

-முனியசாமி.

Comments