ஓட்டப்பிடாரம் பெரியகுளம் நிரம்பி வழிகிறது உபரி நீர் சாலைகளில் போக்குவரத்து துண்டிப்பு.!!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே 90 ஹெட்டேரில் பெரியகுளம் அமைந்துள்ளது இந்த குளம் இன்று காலை நிரம்பியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது இந்த நிலையில் டிசம்பர் 16 17 18 19 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி மாவட்டத்திற்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுவிக்கப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து ஓட்டப்பிடாரம் பகுதிகளில் டிசம்பர் 16ம் தேதி நள்ளிரவு முதல் கனமழை காரணமாக பெரியகுளம் நிறைந்தது உபரி நீர் சாலைகளில் 3 அடி உயரத்திற்கு பெருக்கெடுத்து ஓடுகிறது ஓட்டப்பிடாரத்திற்குள் பசுவந்தனையில் இருந்து கோவில்பட்டியில் இருந்து மக்கள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஒட்டப்பிடாரம் அருகே முப்பலிபட்டி உள்ள குளம் நிறைந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது புதியம்புத்தூரில் இருந்து ஓட்டப்பிடாரம் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஓட்டப்பிடாரம் அருகே சிலோன் காலையில் 20 க்கு மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன. ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உள்ள அனைத்து குளங்களும் நிரம்பிய உள்ளது, கொல்லப்பரும்பு சாமிநத்தம் குளம் உடைந்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்கு
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.
Comments