கருமலை எஸ்டேட் பகுதியில் பகல் நேரங்களில் உலா வரும் சிறுத்தைகள்!! புதர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!!!

 


கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் சுடுகாட்டுப்பாடி எனும் இடத்தில் சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள். 

இந்த குடியிருப்புக்கு அருகில் அதிகளவு புதர்கள், முள் செடிகள்,களைகள் போன்றவை வளர்ந்து அடர்த்தியாக உள்ளது. இதுபோன்று உள்ள இடங்களில் சிறுத்தை கரடி போன்ற வனவிலங்குகள் உள்ளே புகுந்து கொண்டால் வெளியே தெரிவதில்லை. 

குடியிருப்பு பகுதியில் உள்ள நாய்,பூனை,கோழி போன்ற வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளை பிடிக்க சிறுத்தைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்கு அருகில் வருகின்றது. அவ்வாறு வரும் சிறுத்தைகள் இதுபோன்று உள்ள புதர் பகுதியில் பதுங்கி கொள்கின்றன.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எனவே இந்த புதர் போன்ற பகுதிக்கு அருகில் இருக்கும் குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டு வெளியே வர மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். இதனால் மனித வனவிலங்குகள் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. எனவே இந்த குடியிருப்புக்கு அருகில் உள்ள புதர்களை முற்றிலுமாக அகற்ற  நடவடிக்கை எடுக்க  வேண்டும். மேலும் இந்த பகுதிகளில்  சரியான முறையில் மின் விளக்குகள் அமைத்து பராமரிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன் மற்றும் 

வால்பாறை பகுதி நிருபர் 

-திவ்யகுமார்.

Comments