கோவையில் பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுப்பட்ட பெண்- கையும்களவுமாக பிடித்த பொதுமக்கள்!!
கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோடு மோகன் நகரை சேர்ந்தவர் திவ்யா (21). இவர் நேற்று கோவையில் இருந்து தனியார் பஸ்சில் சுந்தராபுரம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது அருகே நின்றிருந்த பெண் ஒருவர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நைசாக திவ்யாவின் கைப்பையில் இருந்த ரூ.500ஐ திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த திவ்யா கூச்சல் போட்டார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்து சுந்தராபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது கிழக்கு சுகுணாபுரத்தை சேர்ந்த ராஜம்மாள் வடிவு (42) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments