படகு இல்லத்தின் பரிதாப நிலை!! நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!!


கோவை மாவட்டம் வால்பாறை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா  பயணிகள் வந்து செல்லும் மிகச் சிறந்த சுற்றுலா தளமாகும். இங்கு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு இல்லம் உள்ளது. ஆனால் படகு இல்லம் முறையான பராமரிப்பு இல்லாமல்  படகு இல்லத்தில் உள்ள தண்ணீர் மிகவும்  அசுத்தம் அடைந்து வருகிறது.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


படகு இல்லத்தில் உள்ள தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குடிநீர் பாட்டில்கள் மற்றும் கழிவு பொருட்களை போட்டு விடுகின்றனர். மேலும் ஆகாயத் தாமரைகள் படர்ந்து உள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர் தூய்மை பணியாளர்களை வைத்து பராமரித்தாலும் படகு இல்லத்தை சுற்றி தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தால் சுற்றுலா பயணிகளில் சிலர் இதுபோன்று படகு இல்லத்தை சீரழித்து வருகின்றனர்.

மேலும் ஆகாய தாமரை படர்வதையும் தடுக்க வேண்டும். எனவே மேற்குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்  

-சி.ராஜேந்திரன் மற்றும் 

வால்பாறை பகுதி நிருபர் 

-திவ்யகுமார்.

Comments