வால்பாறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி...

-MMH

கோவை மாவட்டம் வால்பாறை  நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வால்பாறை காவல்துறை ஆய்வாளர் பொன்ராஜ் முன்னிலையில் நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் நகர மன்ற  உறுப்பினர்கள் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்    செல்வம் N.S.S மாணவர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர்  வால்பாறை பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம், காவல் நிலையம் வழியாக அரசு கலைக் கல்லூரி வரை பேரணி நடைபெற்றது.


பேரணியில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் கொடிய நோய் ஏற்படும் வனவிலங்கு உயிரிழப்பும் ஏற்படும் செடி கொடி மரம் வளர்வதற்கு தடையாக இருக்கும் என்பதால் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் மஞ்சப்பை பயன்படுத்துவோம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷமிட்டவாறும் சென்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர் சங்கர் மற்றும் உமா மகேஸ்வரி இவர்களுடன் துப்புரவு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

-P.பரமசிவம், வால்பாறை.

Comments