ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் கனிமொழி அவர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு!!!

தருவைகுளத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி தெரிவித்தார்.

இந்தியா கூட்டணி  தூத்துக்குடி பாராளுமன்ற மக்களவை தொகுதியில் தி.மு.க சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். இவர் நேற்று மாலை தருவைகுளத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது, கடந்த தேர்தலில் வேட்பாளர் களம் கண்ட போது, எதிர்கட்சிகள் இவர் சென்னையில் இருந்து வருகிறார். வெற்றி பெற்றால் மீண்டும் தூத்துக்குடி வரமாட்டார் என கூறினர். வெற்றி பெற்ற பின்னர் இங்கு பலமுறை வந்துள்ளேன். தருவைகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி செல்ல பஸ் வசதி, கனரா வங்கி கிளை வேண்டும் என மக்கள் கேட்டனர். இவை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்தில் உயர் கோபுர விளக்கு அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இங்கு புதிய மீன்பிடி துறைமுகம் வேண்டுமென மீனவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்து உள்ளனர். இந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். இதற்க்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு ரூ.2 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலத்தில் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முதலமைச்சர் உயர்த்தி தருவதாக கூறியுள்ளார். விரைவில் அந்த நிதி உங்கள் கைகளில் வந்து சேரும். அதனால் தேர்தலில் வெற்றி பெற்று நான் எங்கும் போய்விடவில்லை. உங்களை தேடித்தான் வந்து கொண்டுள்ளேன். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இங்கு மிகப்பெரிய வியட்நாம் கார் தொழிற்சாலை இன்னும் 15 மாதங்களில் தொடங்கப்பட உள்ளது. அதற்குரிய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு அவர்களே பயிற்சி அளித்து பணிக்கு அமர்த்த உள்ளனர். டைடல் பார்க் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த ஆட்சி ஆண், பெண், சாதி, மதம் என எந்த வேறுபாட்டையும் பார்க்காத ஆட்சி. ஆனால், மதத்தை மட்டும் வைத்து அரசியல் செய்து கொண்டுள்ள மோடி, எந்த வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்ற மாட்டார். மழை வெள்ளத்துக்கு எந்த நிவாரணமும் கொடுக்க வில்லை. ஆனால், நிவாரணம் கொடுத்தது தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் கொடுத்து விலையை குறைப்பேன் என்றார். அவர் ஆட்சிக்கு வந்தபோது, ஒரு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.410. தற்போது ஆயிரம் ரூபாய்க்கு மேல். ஆனால், மகளிர் தினத்துக்கு பெண்கள் சமையல் அறையிலேயே இருக்க பிறந்த மாதிரி ரூ.100 குறைத்துள்ளார். இதுதான் அவருக்கு தெரிந்த மகளிர் தினம். சிலிண்டர் விலையை குறைத்துள்ளேன் என தேர்தலுக்கு முன் மகளிர்களை ஏமாற்றுகிறார்.

இதற்காக திமுக தேர்தல் அறிக்கையில் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500 என குறைக்கப்படும். பெட்ரோல் ரூ.75 டீசல் ரூ.65 என குறைக்கப்படும். அதே போல், சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் முற்றிலும் ஒழிக்கப்படும் என கூறியுள்ளோம். திமுக சொல்வதை தான் செய்யும். 

இண்டியா கூட்டணி ஆட்சி மத்தியில் வர வேண்டும். தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சி அங்கே வர வேண்டும். தி.மு.க சார்பில் முதலமைச்சர் என்னை மீண்டும் வேட்பாளராக நிற்கும் வாய்ப்பு அளித்துள்ளார். மீண்டும் உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பை நீங்கள் எனக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது தமிழக மீன்வளம் மீனவர் நலன் கால்நடை பராமரித்துறை அமைச்சர் அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்,  எம்.எல்.ஏ.க்கள் எம்.சி.சண்முகையா, ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் மற்றும் கூட்டணி கட்சியினர் உட்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், ஓசானுத்து, வாஞ்சி மணியாச்சி, அக்கநாயக்கன்பட்டி, மருதன்வாழ்வு, அயிரவன்பட்டி ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments