பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனம் கவிழ்ந்து கோர விபத்து!! காவல்துறையினர் விசாரணை!!!


கோவை சூலூர் அடுத்த நீலாம்பூரில் சைதன்யா பள்ளி செயல்பட்டு வருகிறது. நேன்று காலை அப்பள்ளி வாகனம் வழக்கம்போல பட்டணம் பகுதியில் உள்ள 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு, நாகம்மநாயக்கன்பாளையம் வழியாக ஜே.ஜே நகரில் மாணவ மாணவிகளை ஏற்றுவதற்காக சென்று கொண்டிருந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்போது ஜே.ஜே நகர் செல்லும் 30 அடி அகல மண் சாலையில் சென்று கொண்டிருந்தபோது  எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் சாலை வலது புறமாக வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் பக்கவாட்டில் மண் சரிந்ததால் பள்ளி வாகனம் 7 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அனைவரையும் மீட்டனர். இந்த விபத்தில் மாணவர் ஒருவருக்கும் மாணவி ஒருவருக்கும் காயங்கள்  ஏற்பட்டது. பின்னர் இருவரும் சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments