கோவில்பட்டியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கனிமொழியின் கணவர் இந்திய குடியுரிமை இல்லாதவர் என குற்றச்சாட்டு.!!!!!

 

தூத்துக்குடி வடக்கு மாவட்டம்  கோவில்பட்டி கிருஷ்ணா நகர் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் கோவில்பட்டி மூன்று தொகுதிகளுக்கு  கடம்பூர் ராஜு அவர்கள் தலையில் நடைபெற்றது மாபா பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் வேலுமணி அவர்கள் பேசியது:

திமுக வேட்பாளர் கனிமொழி அவர்களின் கணவர் மற்றும் மகன் இந்தியா குடியுரிமை இல்லாதவர் ஒர் குடும்பம் இந்திய குடியுரிமை பெற்றவராகவும் இருந்தால் தான் இந்த மண்ணின் மீது மக்கள் மீது பாசம் இருக்கும்.  சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில்  உள்ளது . இந்த ஒரு திட்டத்தை தூத்துக்குடிக்கு  செய்யாமல் மீண்டும் பதவி ஆசையில் போட்டியிடுகிறார் என பேசினார். அதைத் தொடர்ந்து மா.பா பாண்டியராஜன் அவர்கள் பேசியது:  

கூட்டணி கட்சி நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் அனைவருமே  உழைத்து தூத்துக்குடியில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்  நமது வெற்றி பிரகாசமாக உள்ளது கிராமங்கள் உள்ள அனைத்து மக்களையும் சந்தித்து வாக்குக்குகள் கேட்குமாறு அறிவுறுத்தினர். எந்த தொகுதியில் அதிகமாக வாக்குகள் வருகிறதா அந்த கிளை செயலாளர்களுக்கு பரிசு உண்டு என பேசினார்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் பேசியது:.  கடந்த மாதம் மழை வெள்ளம் வந்தபோது அவர் சொந்த வீட்டில் 250 க்கு மேற்பட்ட மக்களை  தங்கவைத்து    உதவி செய்தார். மேலும் நமது வேட்பாளர் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று பின்பு 6 சட்டமன்ற தொகுதியில் அவரது  மருத்துவ மனைகள் அமைக்கப்படும். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த கூட்டத்தில் : கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டி  ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் சின்னப்பன், சின்னத்துரை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாண்டி என்ற கோபி இளம் பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன் அன்புராஜ் பழனிச்சாமி அழகர்சாமி மாவட்டம் பாஞ்சாயத்த தலைவர் சத்யா,  பேச்சியம்மாள் எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார் வண்டானம் கருப்புசாமி மகளிர் அணி பத்மாவதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவகர் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி என்ற காமாட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு ஆலோசனைமரியான் , தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் SR சின்னத்துரை ஒட்டப்பிடாரம் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தினேஷ்குமார் மருத்துவர்கள் அணி செயலாளர் கோமல் ராம் உட்பட்ட 1000 க்கு மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்கு தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் -முனியசாமி.

Comments