மலைப்பேச்சியம்மன் கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்: நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு!

'தமிழ் வருடப்பிறப்பை'முன்னிட்டு எட்டையபுரம் அருகே மலைப்பேச்சியம்மன் கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்: நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு!

தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு சித்திரை முதல் நாளான இன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மலை பேச்சி அம்மன் திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக தங்களது குடும்பத்துடன் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இதையொட்டி இன்று மலை பேச்சி அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, பக்தர்கள் கொண்டு வந்த பூ, மாலை, தேங்காய் பழம் உள்ளிட்டவற்றைக் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. 


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். பின்னர் ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தியும், அன்னதானம் வழங்கியும் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபட்டனர். பின் கோவிலில் நடைபெற்ற அறுசுவை அன்னதானத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உணவருந்திச் சென்றனர். மேலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

விளாத்திகுளம் நிருபர் 

-பூங்கோதை.

Comments