ரயில் மோதி அடையாளம் தெரியாத ஆண் பலி!!


கோவை போத்தனுார்- – இருகூர் ரயில்வே தண்டவாளம் ஒண்டிப்புதுார் மேம்பாலம் அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்ட அப்பகுதி மக்கள் போத்தனுார் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆணின் உடலை சோதனை செய்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதில் அவரது வலது கையில் சுதா என பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் உடலை மீட்டு அரசு கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ரயில் மோதி இறந்த அந்த ஆண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments