அந்தமானில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில், 10 தங்கம் உட்பட 16 பதக்கங்களை வென்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்று கோவை சூலூர் ரௌத்திரம் அகாடமி மாணவர்கள் அசத்தியுள்ளனர்!!

கோவை சூலூர் பகுதியில் உள்ள ரௌத்திரம் அகாடமியில் தமிழ் பாரம்பரிய கலைகளான சிலம்பம் உள்ளிட்ட கலைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்..இந்த நிலையில், யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்திய சிலம்பம் மற்றும்   அந்தமான் தமிழர் சங்கம் சார்பாக சர்வதேச அளவிலான  சிலம்ப  போட்டிகள்  கடந்த 2 ,3 ,4 ஆகிய தேதிகளில் அந்தமானில்  நடைபெற்றது. 

இந்தியா, அந்தமான் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியில்  இந்தியா சார்பாக கோவை சூலூர் பகுதியை சேர்ந்த ரௌத்தி்ரம் அகாடமியை சேர்ந்த மாணவ,மாணவிகள் சுமார் 13 பேர் கலந்து கொண்டனர்.

 ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, சுருள்வாள், மான் கொம்பு ,வாள் வீச்சு என  பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில்,  13 ,15 ,17 ,19,,21 ஆகிய வயது பிரிவுகளில் மொத்தம் 10 தங்கம் மற்றும் 6 வெள்ளி உட்பட 16 பதக்கங்களை வென்று அசத்தினர்.அதே போல ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையையும் கோவை வீரர்கள் வென்று அசத்தியுள்ளனர்.

இந்நிலையில் கோவை இரயில் நிலையம் திரும்பிய வெற்றி வீரர்,வீராங்கனைகளுக்கு மே தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பயிற்சியாளர்கள் வினோத், வெங்கடேஷ், பயிற்சியாளர் மற்றும் வீராங்கனையான பாண்டீஸ்வரி உட்பட பெற்றோர்கள்  பொதுமக்கள்,என பலர் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த வெற்றியாளர்களுக்கு மாலை அணிவித்து  இனிப்புகள்  வழங்கி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments