உணவு டெலிவரி ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு!! 2 பேர் கைது!!!

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் கார்த்திக்(31). தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கோவைப்புதூருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக பைக்கில் சென்றார். அப்போது அவரை மறித்த 2 பேர் கார்த்திக்கிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டனர். அதற்கு அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 2 பேரும் பீர்பாட்டிலை உடைத்து குத்திவிடுவதாக மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 700 ஐ பறித்து விட்டு தப்பி சென்றனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து கார்த்திக், குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கார்த்திக்கை மிரட்டி பணம் பறித்தது, சுண்டாக்காமுத்தூரை சேர்ந்த மீன் வியாபாரி பூவேந்தன்(22) மற்றும் சுகுணாபுரம் மைல்கல்லை சேர்ந்த பெயிண்டர் சுதீர்பாபு(45) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி. ராஜேந்திரன்.

Comments