பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படத்தை கிழித்தெரிந்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்திலிருந்து நான் பின்வாங்க போவதில்லை, செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை, செல்வப் பெருந்தகை எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும் அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

அண்ணாமலையின் பதிவுக்கு காங்கிரஸ் கட்சியினர்  பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணாமலை தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வடக்கு மாவட்ட தலைவர் வி எம் சி மனோகரன் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை கிழித்து எரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தலைமை கவுன்சிலர் ஏ எஸ் ஷங்கர் சிறப்புரை வழங்கினார் மேலும்  கவுன்சிலர்கள் அழகு ஜெயபால்,  பி எஸ் சரவணகுமார்  ,காயத்ரி, மாநில பொதுச்செயலாளர் பச்சமுத்து ,கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் சங்கனூர் ஸ்ரீதரன், கோட்டை ஈஸ்வரன் கோயில் அறங்காவலர் ராம் நாகராஜ் நசிர் உசேன், சாய் சாதிக் வழக்கறிஞர் செந்தில்குமார் இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஆகாஷ் காந்தி பேரூர் மயில்பாசமலர் சண்முகம் குணசை செல்வம் ராஜமாணிக்கம் முனியப்பன் சண்முக ராஜன் ராஜ்குமார் வெங்கடாசலம் நாகராஜ் அருண்குமார் சாமிநாதன் காயத்ரி ஜமாலுதீன் ஜெய்கணேஷ்ஸ்ரீதர் விஜூ ஆனந்த் தளபதி மணி யுகே உமர் கதாப் அக்ரோஸ் சதாம் ஆஷிக் சல்மான் சணு அனாஸ் காஜா கிதர்.

-சீனி, போத்தனூர்.

Comments