கோவில்பட்டியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் மாயமான நிலையில் இன்று காலை சடலமாக கண்டெடுப்பு!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் கார்த்திக் முருகன் கட்டிட தொழிலாளி இவரது மனைவி பால சுந்தரி இவர் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வருகிறார்.
இந்த தம்பதிக்கு மணிகண்டன் கருப்பசாமி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மணிகண்டன் இங்குள்ள நகராட்சி பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த பள்ளியில் கர்ப்பசாமி ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நேற்று பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
நேற்று காலையில் பெற்றோர்கள் வழக்கம்போல் வேலைக்கு சென்ற நிலையில் சகோதரன் பள்ளிக்கு சென்று விட்டார். கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மதியம் வீட்டிற்கு வந்த பாலசுந்தரி வீட்டில் இருந்த மகனை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். டிவி மட்டும் ஓடிக் கொண்டிருந்தது சிறுவன் கழுத்தில் 1.5 பவுன் செயினும் மற்றும் கையில் ஒரு கிராம் மோதிரமும் அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது.
பாலசுந்தரி உடனடியாக கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார் அவர் விரைந்து வந்த நிலையில் தம்பதியினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இது குறித்து கோவில்பட்டி மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரம் விரைந்து வந்து சிறுவனை தேடி உள்ளனர்.
சிறுவன் கிடைக்கவில்லை இந்த நிலையில் இன்று காலை சிறுவன் கருப்பசாமியை பக்கத்து வீட்டு மொட்டை மாடி மூச்சு பேச்சு இல்லாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, அவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது விட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுவனை நினைத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மிகவும் வேதனைப்பட்டு கதறி அழுதபடி உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.
Comments