யானை தாக்கி மூதாட்டி மரணம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் உள்ள ஜெயஸ்ரீ தனியார் எஸ்டேட் நிறுவனத்திற்குட்பட்ட இடிஆர் எஸ்டேட்டில் தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் ஐந்தாவது வீட்டில் பெரியசாமி என்பவரின் மனைவி அன்னலட்சுமி வயது 67 என்பவர் குடியிருந்து வருகிறார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

26 1 2025ஆம் தேதி சுமார் இரவு 8.50 மணி அளவில் குடியிருப்பு பகுதிக்கு வந்த காட்டு யானை குடியிருப்பின் கடைசியில் உள்ள ரேஷன் கடை கதவை உடைத்துள்ளது. அப்போது சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே வந்த மூதாட்டியை அந்த காட்டு யானை இழுத்து கீழே தள்ளி காலால் தாக்கி உள்ளது. இந்தச் சம்பவம் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி சத்தம் போட்டு யானையை விரட்டியதை தொடர்ந்து யானை கட்டுக்குள் நுழைந்தது.

இச்சம்பவத்தில் இடது காலில் தோல் கிழிந்த நிலையில் ரத்த காயம் ஏற்பட்ட மூதாட்டியை உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம்  வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் அறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் கிரிதரன் தலைமையில் முதலுதவி சிகிச்சைக்காக வனத்துறை சார்பில் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

நாளைய வரலாறு செய்திக்காக 

வால்பாறை இருந்து 

-திவ்யக்குமார்.

Comments