கோவையில் நடைபெற்ற சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்!!

கோவை கதிர்நாயக்கன்பாளையத்தில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதனை கதிர்நாயக்கன்பாளையம் வார்டு உறுப்பினர் ராஜாமணி தொடங்கி வைத்தார் . பி.பி.ஜி கல்வியியல் கல்லுாரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா டயாபடிக் கேர் மற்றும் குருடம்பாளையம் ஊராட்சி இணைந்து முகாமை நடத்தினர் . 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா டயாபடிக் கேர்  மருத்துவமனையின் தலைவர் பிரசன்னா சர்க்கரை நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை விவரித்தார்.

உணவு , உடற்பயிற்சி , மருந்துகள் , மற்றும் கண்காணிப்பு ஆகியவை நான்கு துாண்களாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறினார் . இந்த முகாமிற்கு வருகை தந்த 150 பேருக்கு சர்க்கரை நோய் பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான மருத்துவ அறிவுரைகளும் , மருந்துகளும் மருத்துவரால் வழங்கப்பட்டது . இதில் பி.பி.ஜி ஆப்டொமெட்ரி மாணவர்கள் கண்பரிசோதனை செய்தனர் . இதில் பி.பி.ஜி கல்வியியல் கல்லுாரி ஆசிரியர்களும் , மாணவர்களும் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments