பாதியிலே நிற்கும் நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருமா..?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள வாகமாலை எஸ்டேட் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை ஆறு, ஏழு மாதம் காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மழைக்காலங்களிலும் வெயில் காலங்களிலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் உள்ளது. இந்த  நிழற்குடை கட்டப்பட்டு பாதியிலே விடப்பட்டுள்ளது. அப்பகுதி கவுன்சிலரிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

வனவிலங்குகள் அதிகளவு சுற்றித் திரிவதினால்  மழைக்காலங்களில் அவ்வழியே உள்ள பொதுமக்கள் செல்வதற்கும் பள்ளி குழந்தைகள் செல்வதற்கும் மிகவும் அச்சப்படுகிறார்கள். 

நிழற்குடை முழுமையாக கட்டி தருவார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

நாளைய வரலாறு செய்திக்காக 

வால்பாறையில் இருந்து 

-திவ்யக்குமார்.

Comments