விபத்துகள் தவிர்த்து காட்டுத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பொதுமக்களும் வனவிலங்கு அதிகாரிகளும்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள சோலையார் சிலுவை மேடு பகுதியில் திடீரென பரவிய காட்டு தீயை  பொதுமக்கள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் சேர்ந்து அணைத்தனர்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் யானைகள், சிறுத்தைகள் காட்டு மாடுகள் போன்ற வன விலங்குகள் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் மாடுகள் அதிக அளவு உலா வருவது வழக்கம். சிலுவை மேட்டில் திடீரென காட்டுத்தீப் பரவியதும் அப்பகுதியில் பொதுமக்கள் வனவிலங்கு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் வனவிலங்கு அதிகாரிகள் விரைந்து வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.

இதனால் அப்பகுதியில் வனவிலங்கு உயிர் சேதம் இன்றி விபத்துக்களும்  தவிர் க்கப்பட்டது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து 

-செந்தில்குமார், திவ்யக்குமார்.

Comments