குடிநீர் குழாயில் வரும் நீர்...! பொதுமக்கள் குடிப்பதற்கா...? தொற்று நோய் பரவுவதற்கா...?!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை தாலுகா அண்ணா நகர் மற்றும் துளசி நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் அசுத்தமாக வருகிறது. குடிநீர் குழாயில் வரும் நீர் குடித்தால் தொற்று நோய்கள் தான் பரவும். வால்பாறை நகராட்சி ஆய்வாளர்களிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அப்பகுதியில் உள்ள அக்கா மலை கவுன்சிலரிடம் புகார் அளிக்கப்பட்டது. அப்போது அவர் "எங்களது வீட்டிலும் இப்படி தான் தண்ணீர் வருகிறது. நான் யாரிடம் போய் கூறுவேன்" என்று கவலையாக சொல்லிவிட்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் வரும் குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும், இதனால் அசம்பாவிதங்கள் வரும் முன்னே தடுப்போம் என கூறியும் வால்பாறை நகராட்சி ஆய்வாளர்கள் கண்டு கொள்வதில்லை, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் இடையே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.
Comments