யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள மழுக்க பாறை எஸ்டேட் பகுதியில் ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்தவர் தம்பான் என்பவரின் மகன் ஜெபஸ்டின் வயது 20 என்பவர் நேற்று தேன் எடுப்பதற்காக வனப்பகுதிக்குள் சென்றார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இரவு நேரம் ஆகியும் திரும்ப வராததால் அப்பகுதி மக்கள் அவரைத் தேடி  பார்த்தனர். அப்போது காட்டு யானை தாக்கி துரத்தியது என அவர் கூட சென்ற இன்னொரு நபர் கூறினார். பின்பு அவரை வனவிலங்கு அதிகாரிகளுடன் சென்று பார்த்த பொழுது அவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்ததாக தெரிந்தது. 

உடனே சாலக்குடி அரசு மருத்துவமனைக்கு அவர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் திவ்யக்குமார் 

வால்பாறை.

Comments