மனிதர்களை வேட்டையாடும் முன்னே நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள ரொட்டி கடைப் பகுதியில் சிலுவை மேட்டு வழியாக தேயிலை காட்டின் உள்ளே பதுங்கி இருக்கும் காட்டு விலங்குகள், சிறுத்தைகள் ரொட்டிகடை அருகாமையில் குடியிருப்பு மக்களின் வீடுகளில் உள்ள நாய்களை வேட்டை ஆடுகின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ 

அப்பகுதியில் வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னே கூண்டுகளை வைத்து சிறுத்தைகளை பிடிக்க வேண்டும், அப்பகுதிகளில் சிறு குழந்தைகள் அதிகம் உள்ளது. பின்பு அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. அப்பகுதியில் சுற்றிவர வலைக் கம்பிகளை அடித்து சிறுத்தைகள் நடமாட்டத்தை உள்ளே வராமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-திவ்யகுமார்.

Comments