தோட்டத் தொழிலாளிகளை தாக்கிய காட்டு மாடுகள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள தோனி முடி பகுதியில் வட மாநிலத்தவர்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பொழுது எதிர்பாராத விதமாக காட்டில் உள்ளே பசியோடு இருந்த காட்டு மாடுகள் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களை  தாக்கியது. கட்டுமாடுகள் தாக்கியதில் இரண்டுபேர் படுகாயம் அடைந்தனர்.

அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டு காட்டு மாடுகளை விரட்டினர். காயம் ஏற்பட்ட இருவரை முடிஸ் பெரிய ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு அவர்கள் 108 வாகனத்தில் வால்பாறை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதியில் உள்ள வனவிலங்கு அதிகாரிகள் எஸ்டேட் தொழிலாளர்களிடம்  கவனமாக பணியாற்ற வேண்டும், வனவிலங்குகள் அதிகமாக உள்ளது என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-திவ்யக்குமார்.

Comments