25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து நெகிழ்ந்த கோவை!! வேளாண்மை பல்கலைகழக மாணவர்கள் தங்கள் பழைய நண்பர்களை காண கடல் கடந்து வந்து மகிழ்ச்சி!!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக கல்லூரியில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது.

தங்களது வகுப்பறைகளில் அமர்ந்த மாணவர்கள் தங்களுக்கு பாடம் எடுத்த பேராசிரியர்களுடன் கலந்துரையாடி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

நீண்ட வருடங்களுக்கு பின்பு தங்களது ஆசிரியர்களை சந்தித்த மாணவர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்த கொண்டதோடு,மீண்டும் வகுப்பறைகளில் அமர்ந்து மகிழ்ந்தனர்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முந்தைய நட்புக்காக கடல் கடந்து நண்பர்கள் வந்திருந்தனர். லண்டன், மலேசியா,துபாய், சிங்கப்பூர்  போன்ற வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் சுமார் 50 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவ, மாணவிகள் சார்பாக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.  தொடர்ந்து அனைவரும் இணைந்து குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments