சரியான முறையில் வழித்தடம் இல்லாமல் தவிக்கும் மக்கள்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அண்ணா நகர் மாரியம்மன் கோவில் கீழ்ப்பகுதியில் உள்ள வேலுச்சாமி, மனைவி மாரியாய், மகன் சசிகுமார். அப்பகுதியில் சின்னத்தம்பி, பூங்கொடி ஆகியோர் வீட்டுக்கு செல்லும் வழித்தடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது..பலமுறை கீழே விழ வேண்டிய அவல நிலை இருந்துள்ளது. அப்பகுதியில் தடுப்பு சுவர் இல்லாமல் மிகவும் ஆபத்தான நிலையில் பயணித்து கொண்டிருக்கிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தடுப்புச் சுவர் கட்டுவதற்கும் நடபாதை படிக்கட்டு அமைத்து தருவதற்கும் வால்பாறை நகராட்சி ஆய்வாளர், ஆணையர் மற்றும் கவுன்சிலர்களிடம் புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதியில் பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் ஆபத்தான நிலை உள்ளது.
அப்பகுதி நடைபாதை சரி செய்து தர வேண்டும், ஏதேனும் அவசரத்திற்கு செல்வதற்கு முடியாமல் உள்ளது. நடைபாதையை சரி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.
Comments