கந்தர்வகோட்டை அருகே போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்...

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.  அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா போதைப் பொருள்  எதிர்ப்பு விழிப்புணர்வு குறித்து பேசும் பொழுது  போதைப்பொருள் பயன்பாட்டிற்கான அறிகுறிகள் பசியின்மை, எடை இழப்பு, சுவாச பிரச்சனை, ஊக்கமின்மை, உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மனநிலை மாற்றங்கள், எதிலும் கவனம் செலுத்த இயலாமை, நினைவாற்றல் பிரச்சனை உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும், ஒரு தனி நபரின் உடல் அல்லது மனம் சார்ந்த செயல்பாட்டை மாற்றும் எந்த ஒரு ரசாயனமும் போதைப் பொருளாகும். எவ்வித மருத்துவ நோக்கமின்றி ஒரு மருந்து அல்லது போதை பொருளை அதன் அளவு வீரியம் அல்லது பயன்பாட்டு முறை மீறி உடல் அல்லது மனம் சார்ந்த செயல்பாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்துவது போதைப்பொருள் முறைகேடு அல்லது தவறான பயன்பாடு எனப்படுகிறது. 


உங்களுக்கு போதை பொருள் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களை யாராவது  வழங்கினால் உறுதியாக மறுத்து விடுங்கள். போதைப் பொருள் மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாடு உங்கள் வாழ்க்கையை அழித்துவிடும் அவை உங்கள் கல்வி உடல் மற்றும் மன ஆரோக்கியம் உங்கள் இலக்குகளை அடையும் திறன் மற்றும் உங்கள் எதிர்கால திட்டங்களை பாதிக்கும்,நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆதலால்  ஒவ்வொருவரும் எந்த சூழ்நிலையிலும் போதைப் பொருள்களை நான் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் ,போதைப் பொருளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். நம்மால் முயன்ற அளவு போதை பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா, நிவின், வெள்ளைச்சாமி, செல்வி ஜாய், ஜெம்ம ராகினி சகாய ஹில்டா கணினி உதவியாளர் தையல்நாயகி உள்ளிட்டோர் ர் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து பேசினார்.

Comments